Pages

Saturday, December 17, 2016

எதிரிகள் எல்லாருமே
ஒரு காலத்தில் நமக்கு
நண்பர்களாகவே இருந்திருக்கிறார்கள்!

Sunday, October 11, 2015

நமக்கு வரலாறு முக்கியம் பாஸ் ...!

11.10.2015  வலைப்பதிவர்  திருவிழாவில்.............
என்  வாழ்க்கை வரலாற்றில்  முதல் முறையாக  உணவுக்குழு தலைமை !
என்னால்  முடியும் என்கிற  என்  வாழ்க்கை  மொழியோடும்  உணர்வோடும் ஏற்றுக்கொண்டேன்.

             10.10.2015  மாலையில் தேநீரோடு துவங்கினோம். இரவு  சப்பாத்தி+குருமா.  கிச்சடி+ தேங்காய் சட்டினி.  மசாலாப் பால்  அவ்வளவுதான்.

          11.10.2015  காலையில்  இட்லி, பொங்கல், வடை + தக்காளி சட்டினி, தேங்காய் சட்டினி, சாம்பார்+ காபி  அவ்வளவுதான்.
      காலை 11 மணிக்கு  சுடச்சுட  பேபிகான்  சூப்பு+  சூடான  தேநீரும்!

              மதிய உணவு,  தலைவாழை  இலையில்  பூந்தி+ உப்பு.  காய்கறி கட்லட்,  பனீர்   பட்டாணி பொறியல்,கருணைக்கிழங்கு மசியல், மாஇஞ்சி +கொண்டைக்கடலை  மண்டி,  சேனைக்கிழங்கு வறுவல்,  புடலைக்காய் சிப்ஸ், மாங்காய் ஊறுகாய், அப்பளம், பாயாசம். கருவேப்பிலை சோறு முதலில் அப்புறம்  சோறு+ பருப்பு நெய், சாம்பார், பூண்டுக்குழம்பு, பைன் ஆப்பிள் ரசம், தயிர். தண்ணீர் பாட்டில் வைத்தோம்.

   சாப்பிட்டு கைகழுவியபின்,  முக்கனிகள் (மா, பலா, வாழை மிகச்சிறிய அளவோடு)  சுவீட் பீடா , ஐஸ்கிரீம் எடுத்துக்கொண்டார்கள்.
மாலை 4.30 மணிக்கு சுடச்சுட பணியாரம் இனிப்பு 2, காரம்2+ இஞ்சி டீ.

எல்லாவற்றையும்விட  அன்பான  பரிமாறல் + உபசரிப்பு.
எல்லோரும் ருசித்துவிட்டு  நன்றாகயிருக்கிறது என்று  பாராட்டினார்கள். அத்தனை பாராட்டுகளும்  ருசியாக சமைத்த சமையல் கலைஞர்களுக்கே!

பைவ் ஸ்டார் ஹோட்டல்தான் சமையல் கலைஞர் பெயர்  சொல்வாங்களா? நம்ம கமையல் கலைஞர் பெயர்  இதோ,
    திரு.கரு. கருப்பையா மைனர் அவர்கள்
   பொன்னனூர்___நச்சாந்துபட்டி   944292606

சமையல் கலைஞர்கள்  அனைவருக்கும் கைக்கூப்பிய  நன்றிகள்!
என் இரு கைகளாக செயல்பட்ட கவிஞர் மாலதிக்கும், தங்கை ரோஸ்லினுக்கும் (கவிஞர் வைகறையின்  மனைவி) நன்றிகள்!
புதுக்கோட்டை நர்சரிப்பள்ளிகளின்  தலைவர் திரு.அண்ணாத்துரை (அவரிடம் தான்  பொறுப்பை ஒப்படைத்திருந்தேன்) அவர்களுக்கும் நன்றிகள் பல.....!
மகிழ்ச்சியாக  சாப்பிட்ட அனைவருக்கும் நன்றிகள்!  பொறுப்பை  எனக்கு  வழங்கிய  விழாக்குழு  உறுப்பினர்கள் அனைவருக்கும்  கோடான கோடி நன்றிகள்! மேடை நிகழ்வுகளைப்  பார்க்கமுடியவில்லையே என்ற ஏக்கத்தைப் போக்கிய  பதிவர்களுக்கும் நன்றி!  முழுநிகழ்வுகளையும் பதிவில் பார்த்துவிட்டுதான் இரவு  தூங்கினேன்.
மிக மகிழ்ந்தும் மிக நீண்டும்  வாழ்கிறேன்....உங்கள்  அனைவராலும்!




  

Thursday, October 1, 2015

குவளையாக வேண்டாமே.....குளமாக இருக்கலாமே !

என்  நாகரீகம்   உப்போடு  தொடங்குகிறது .....


கைநிறைய  உப்பை  அள்ளி , ஒரு குவளை  தண்ணீரில் கரைத்து, குடித்துப்பார்த்தால்  எப்படியிருக்கும்  என்று  உங்களுக்குத் தெரியும்! அதே மாதிரி  கைநிறைய  உப்பை அள்ளி, ஒரு குளத்தில் கரைத்து, குடித்துப்பார்த்தால்  சுவையாக  இருக்கும்!  அதே அளவு  உப்புதான், அதிகத் தண்ணீரில்  கரைக்கும்போது  அது  உவர்ப்பாக இல்லை. எந்தப்  பாத்திரத்தில் கரைக்கிறோம்  என்பதில் தான்  சுவையடங்கியிருக்கிறது.  நாமும்  எந்தக்கூட்டத்தில்  கலக்கிறோம்  என்பதில் தான் உணர்வடங்கியிருக்கிறது!
பெரிய  பாத்திரமாக  மனதை  ஆக்கிக்கொண்டு  புதுக்கோட்டை வலைப்பதிவர் திருவிழாவிற்கு  வருகை தந்திட  அன்புடன்  அழைக்கின்றேன் !


குவளையில்  கரையாமல்...புதுக்கோட்டையில்  கரையலாமே....!

நான்  உணவுக்குழு !  நமக்கு  உணர்வோடு  உணவும்  முக்கியம்!
சாப்பாடு  சம்பந்தமா  எப்ப வேணாலும்  பேசலாம்...9842179961 / 7402734201



Friday, September 11, 2015

நமக்கு சோறு முக்கியம் பாஸ் ! 26 /30

பசித்தவனுக்கு  சோறுதான்   கடவுள் !
புதுக்கோட்டை  வலைப்பதிவர்  திருவிழாவில்  நீங்கள்  சாப்பிடும்போது  ஒரு  பருக்கை கூட  தவறி  கீழே விழக்கூடாது.  ஏன்  தெரியுமா ?   அந்த  பருக்கை  வயலில்  நெல்லா  முளைச்சப்ப  உதிர்ந்து போயிருக்கலாம்.  ஆனா  அப்படிப் போகல.... களத்துல  கதிர்  அடிக்கும்போது  காத்துல பறந்து  போயிருக்கலாம். அப்படியும்  போகல..... நெல்லு  அவிக்கும்போது  தீஞ்சு  போயிருக்கலாம். அப்புடியும்  போகல...... அரிசியா  தீட்டும்போது  உடைஞ்சு போயிருக்கலாம்.  அப்புடியும்  போகல......வேற  யாராவது  வீட்டுக்குப்  போயிருக்கலாம். அப்புடியும்  போகாம  நம்ம  வலைப்பதிவர்  திருவிழாவுக்கு  தப்பி  வந்து  அதுலேயும்  உங்க  இலையில  வந்து  உட்காருதுன்னா... அது  உங்களுக்கு  மட்டுமே  ஆன  சோறு  பாஸ் !

ஒரு  பருக்கையே  இவ்வளவு  பயணம்  செஞ்சு  புதுக்கோட்டை  வலைப்பதிவர்  திருவிழாவுக்கு  வரும்போது  நீங்கள்   மட்டும்  என்ன  ........வாங்க   சாப்பிடலாம்
     
             அப்பு  கறீஸ்...அசைவம்  ரொம்ப  நல்லாயிருக்கும்

Thursday, September 10, 2015

நமக்கு சோறு முக்கியம் பாஸ் ! 27 / 30



மக்கள் எதைச் சாப்பிட்டாலும் அதில் பாதி அவர்களுடைய வயிற்றை நிரப்புகிறது. மீதிப்பாதி டாக்டர்களின் வயிற்றை நிரப்புகிறது---மருத்துவ அனுபவம் இது ! பாதி அளவு சாப்பிட்டால் உடம்பும் பாழாகாது, மருத்துவரின் தேவையும் இருக்காது.

நீங்கள் கவலையான மனநிலையில் இருக்கும்போது சாப்பிட்டால், நல்ல உணவுகூட விஷத்தன்மையை ஏற்படுத்திவிடும். அதேசமயம்
நீங்கள் சந்தோஷம் பொங்கும் மனோநிலையில் இருக்கும்போது சாப்பிட்டால், விஷம்கூட தனது முழு பாதிப்பையும் தராமல் நின்றுபோகும் வாய்ப்புள்ளது----இது சாத்தியமும் சத்தியமும் கூட! சாப்பிடும்போது நீங்கள் என்ன மனநிலையில் இருக்கிறீர்கள் என்பதுதான் முக்கியம்!
உங்கள் அனைவரையும் மகிழ்ச்சியான மனநிலையில் வைத்திருக்கும் முழுப் பொறுப்பையும் புதுக்கோட்டை வலைப்பதிவர் சந்திப்பு திருவிழாக்குழுவினர் செய்துவிடுவார்கள். அப்புறம் என்ன...நமக்கு சோறு முக்கியம் பாஸ்! சாப்புட வா....ங்...க!

சரவணபவன் கீழ 2 ம்வீதியில சாஸ்தாபவன் அருகில இருக்கு(சைவம்தான்) நிறைய கஷ்டமர்கள் உண்டு.

Wednesday, September 9, 2015

நமக்கு சோறு முக்கியம் பாஸ் ! 28 / 30

தினமும்  உதிப்பதாலேயே  சூரியன்  அற்பமானதாகி  விடாது !
தினமும்  சாப்பிடறதால  அது  சாதாரண  செயலாகிவிட முடியாது!

வலைப்பதிவர்  திருவிழாவில்  சாப்பிடுவதற்கு  அன்போடு அழைக்கிறோம்.

இன்னக்கி  அசைவத்துக்குதான்  போறோம்----அதுவும்  இரவு உணவு மட்டும்.

                      முத்துப்பிள்ளை  கேண்டீன்

புதுக்கோட்டையில  பச்சப்புள்ளையக்  கேட்டாக்கூட  பளிச்சின்னு  சொல்லும்.
இந்த  கேண்டீன்  முட்டை மாஸ்  சாப்புடாம  ஊருக்குப் போனா  பாவம் வுடாது.
அவிச்ச  முட்டைய  நறுக்கிப்போட்டு தக்காளி  சேர்த்து ஒரு கிரேவி  (அது ரகசியம் )  ஊத்தி சுடச்சுட  வாழை இலையிலக்  கட்டித்தருவாங்க  பாருங்க.......
ச்சே...இலையக்கூட  திண்ணுப்புடலாம்!

இன்னும் தெரிஞ்சுக்க இங்க சொடுக்குங்க

Tuesday, September 8, 2015

நமக்கு சோறு முக்கியம் பாஸ் ! 29

சாப்பிடுவது  வயிற்றை  நிரப்புகிற  செயல்பாடு  மட்டுமல்ல
மற்றவர்களோடு  பகிர்ந்து  கொள்கிற  மனப்பான்மையும்தான்!
சாப்பாட்டோடு  பல  அனுபவங்களையும்  பகிர்ந்து  கொள்ள
புதுக்கோட்டை  வலைப்பதிவர்  திருவிழாவுக்கு  அன்போடு  அழைக்கிறோம்!