Pages

Thursday, September 10, 2015

நமக்கு சோறு முக்கியம் பாஸ் ! 27 / 30



மக்கள் எதைச் சாப்பிட்டாலும் அதில் பாதி அவர்களுடைய வயிற்றை நிரப்புகிறது. மீதிப்பாதி டாக்டர்களின் வயிற்றை நிரப்புகிறது---மருத்துவ அனுபவம் இது ! பாதி அளவு சாப்பிட்டால் உடம்பும் பாழாகாது, மருத்துவரின் தேவையும் இருக்காது.

நீங்கள் கவலையான மனநிலையில் இருக்கும்போது சாப்பிட்டால், நல்ல உணவுகூட விஷத்தன்மையை ஏற்படுத்திவிடும். அதேசமயம்
நீங்கள் சந்தோஷம் பொங்கும் மனோநிலையில் இருக்கும்போது சாப்பிட்டால், விஷம்கூட தனது முழு பாதிப்பையும் தராமல் நின்றுபோகும் வாய்ப்புள்ளது----இது சாத்தியமும் சத்தியமும் கூட! சாப்பிடும்போது நீங்கள் என்ன மனநிலையில் இருக்கிறீர்கள் என்பதுதான் முக்கியம்!
உங்கள் அனைவரையும் மகிழ்ச்சியான மனநிலையில் வைத்திருக்கும் முழுப் பொறுப்பையும் புதுக்கோட்டை வலைப்பதிவர் சந்திப்பு திருவிழாக்குழுவினர் செய்துவிடுவார்கள். அப்புறம் என்ன...நமக்கு சோறு முக்கியம் பாஸ்! சாப்புட வா....ங்...க!

சரவணபவன் கீழ 2 ம்வீதியில சாஸ்தாபவன் அருகில இருக்கு(சைவம்தான்) நிறைய கஷ்டமர்கள் உண்டு.

2 comments: