Pages

Sunday, October 11, 2015

நமக்கு வரலாறு முக்கியம் பாஸ் ...!

11.10.2015  வலைப்பதிவர்  திருவிழாவில்.............
என்  வாழ்க்கை வரலாற்றில்  முதல் முறையாக  உணவுக்குழு தலைமை !
என்னால்  முடியும் என்கிற  என்  வாழ்க்கை  மொழியோடும்  உணர்வோடும் ஏற்றுக்கொண்டேன்.

             10.10.2015  மாலையில் தேநீரோடு துவங்கினோம். இரவு  சப்பாத்தி+குருமா.  கிச்சடி+ தேங்காய் சட்டினி.  மசாலாப் பால்  அவ்வளவுதான்.

          11.10.2015  காலையில்  இட்லி, பொங்கல், வடை + தக்காளி சட்டினி, தேங்காய் சட்டினி, சாம்பார்+ காபி  அவ்வளவுதான்.
      காலை 11 மணிக்கு  சுடச்சுட  பேபிகான்  சூப்பு+  சூடான  தேநீரும்!

              மதிய உணவு,  தலைவாழை  இலையில்  பூந்தி+ உப்பு.  காய்கறி கட்லட்,  பனீர்   பட்டாணி பொறியல்,கருணைக்கிழங்கு மசியல், மாஇஞ்சி +கொண்டைக்கடலை  மண்டி,  சேனைக்கிழங்கு வறுவல்,  புடலைக்காய் சிப்ஸ், மாங்காய் ஊறுகாய், அப்பளம், பாயாசம். கருவேப்பிலை சோறு முதலில் அப்புறம்  சோறு+ பருப்பு நெய், சாம்பார், பூண்டுக்குழம்பு, பைன் ஆப்பிள் ரசம், தயிர். தண்ணீர் பாட்டில் வைத்தோம்.

   சாப்பிட்டு கைகழுவியபின்,  முக்கனிகள் (மா, பலா, வாழை மிகச்சிறிய அளவோடு)  சுவீட் பீடா , ஐஸ்கிரீம் எடுத்துக்கொண்டார்கள்.
மாலை 4.30 மணிக்கு சுடச்சுட பணியாரம் இனிப்பு 2, காரம்2+ இஞ்சி டீ.

எல்லாவற்றையும்விட  அன்பான  பரிமாறல் + உபசரிப்பு.
எல்லோரும் ருசித்துவிட்டு  நன்றாகயிருக்கிறது என்று  பாராட்டினார்கள். அத்தனை பாராட்டுகளும்  ருசியாக சமைத்த சமையல் கலைஞர்களுக்கே!

பைவ் ஸ்டார் ஹோட்டல்தான் சமையல் கலைஞர் பெயர்  சொல்வாங்களா? நம்ம கமையல் கலைஞர் பெயர்  இதோ,
    திரு.கரு. கருப்பையா மைனர் அவர்கள்
   பொன்னனூர்___நச்சாந்துபட்டி   944292606

சமையல் கலைஞர்கள்  அனைவருக்கும் கைக்கூப்பிய  நன்றிகள்!
என் இரு கைகளாக செயல்பட்ட கவிஞர் மாலதிக்கும், தங்கை ரோஸ்லினுக்கும் (கவிஞர் வைகறையின்  மனைவி) நன்றிகள்!
புதுக்கோட்டை நர்சரிப்பள்ளிகளின்  தலைவர் திரு.அண்ணாத்துரை (அவரிடம் தான்  பொறுப்பை ஒப்படைத்திருந்தேன்) அவர்களுக்கும் நன்றிகள் பல.....!
மகிழ்ச்சியாக  சாப்பிட்ட அனைவருக்கும் நன்றிகள்!  பொறுப்பை  எனக்கு  வழங்கிய  விழாக்குழு  உறுப்பினர்கள் அனைவருக்கும்  கோடான கோடி நன்றிகள்! மேடை நிகழ்வுகளைப்  பார்க்கமுடியவில்லையே என்ற ஏக்கத்தைப் போக்கிய  பதிவர்களுக்கும் நன்றி!  முழுநிகழ்வுகளையும் பதிவில் பார்த்துவிட்டுதான் இரவு  தூங்கினேன்.
மிக மகிழ்ந்தும் மிக நீண்டும்  வாழ்கிறேன்....உங்கள்  அனைவராலும்!




  

Thursday, October 1, 2015

குவளையாக வேண்டாமே.....குளமாக இருக்கலாமே !

என்  நாகரீகம்   உப்போடு  தொடங்குகிறது .....


கைநிறைய  உப்பை  அள்ளி , ஒரு குவளை  தண்ணீரில் கரைத்து, குடித்துப்பார்த்தால்  எப்படியிருக்கும்  என்று  உங்களுக்குத் தெரியும்! அதே மாதிரி  கைநிறைய  உப்பை அள்ளி, ஒரு குளத்தில் கரைத்து, குடித்துப்பார்த்தால்  சுவையாக  இருக்கும்!  அதே அளவு  உப்புதான், அதிகத் தண்ணீரில்  கரைக்கும்போது  அது  உவர்ப்பாக இல்லை. எந்தப்  பாத்திரத்தில் கரைக்கிறோம்  என்பதில் தான்  சுவையடங்கியிருக்கிறது.  நாமும்  எந்தக்கூட்டத்தில்  கலக்கிறோம்  என்பதில் தான் உணர்வடங்கியிருக்கிறது!
பெரிய  பாத்திரமாக  மனதை  ஆக்கிக்கொண்டு  புதுக்கோட்டை வலைப்பதிவர் திருவிழாவிற்கு  வருகை தந்திட  அன்புடன்  அழைக்கின்றேன் !


குவளையில்  கரையாமல்...புதுக்கோட்டையில்  கரையலாமே....!

நான்  உணவுக்குழு !  நமக்கு  உணர்வோடு  உணவும்  முக்கியம்!
சாப்பாடு  சம்பந்தமா  எப்ப வேணாலும்  பேசலாம்...9842179961 / 7402734201